யம்மா கால் கழுவிவிடு
என்று சட்டையை தூக்கிபிடித்தபடி
கத்திய நேரத்தில்
இறந்து போயிருந்தால்
என் அம்மா
பதினொன்னு பன்னென்டு படிக்கிறேன்
என்று விசும்பிய நேரத்தில்
பாலிடெக்கினிக்கில் பணம் கட்டியிருந்தார்
என் அப்பா
ஒன்னும் நிரந்திரமா இல்ல
காசு சேத்துக்கிறேனே
என்று அப்பாவிடம்
கெஞ்சிய நேரத்தில்
புகுந்திருந்தால் என் மனைவி
வேல புடிக்கலெ
இது எனக்கான களமில்ல
என்றெண்ணிய நேரத்தில்
பிறந்திருந்தான் என் மகன்
சைடுல எதாச்சும் முயற்சிபண்ணா
கூட கொஞ்சம் பணம் கெடைக்கும்ல
என்று மனைவி சொல்லிய நேரத்தில்
வயதுக்கு வந்திருந்தால் என் மகள்
ஊர்ல ஒரு வீடு பாத்து தர்றேன்,
அக்கடான்னு அங்க இருங்க
என்று மகன் சொல்லிய நேரத்தில்
வந்துவிட்டது என் மரணம்
- அபராஜிதன்
Superrrr...
ReplyDeleteeppidi ivalavu abaaramaga yosikirirgal..
ReplyDeleteillai vazhkaiyin edharthama....