சிறுகதை
விடிகாலை மார்கழியில் போர்வையை, முகம் மட்டும் தெரியும்படி காதுகளை பொத்தி தூங்குவது மிகவும் சுகமானது. தூரத்தில் சிவகாமியம்மன் கோவிலில் ஒலிக்கப்படும் மந்திரம், பனியில் பெருமளவு கரைந்து காதுகளை வந்தடையும் போது தாலாட்டுவதை போலிருக்கும். அதிகாலை தூக்கம், தூக்கத்தின் சுகத்தை பூரணப்படுத்தும். ஆனால் அந்த சுகம், ஒளி பட்டவுடன் காணாமல் போகும் இருள் போல. மனம் அதற்கு ஏங்கினாலும் காலம் விடுவதில்லை. சில நேரம் அம்மாக்கள் விடுவதில்லை.