நான் பிறந்த கணத்தில்
பிறந்ததிந்த உலகு
முலையில் பாலுடன் தொடங்கி
ஒவ்வொன்றும்
ஒவ்வொன்றாய்
சிருஷ்டிக்கப்பட்டது
புழுவும் பூண்டும்
பறவையும் பூச்சியும்
விலங்கும் மனிதனுமாய்
பிறந்தபடியிருந்தன
காணும் தோறும்
படைப்புகள்
பெருகியபடியிருந்தன
எனக்கு வேண்டாதவையும்
உலவின இவ்வுலகில்
எனினும் நான்
அறிந்தே இருந்தேன்
எனை சுற்றி
வியாபித்திருந்த உலகு
சட்டெனெ அழிந்து போகும்
என் மரண கணத்தில்
- அபராஜிதன்
Kalakura Machi...
ReplyDeleteUngalukku mattumalla ellorukum adhu azhindhu pogum.
ReplyDelete