Monday, September 13, 2010

ஜனன மரணம்

நான் பிறந்த கணத்தில்
பிறந்ததிந்த உலகு
முலையில் பாலுடன் தொடங்கி
ஒவ்வொன்றும்
ஒவ்வொன்றாய்
சிருஷ்டிக்கப்பட்டது

புழுவும் பூண்டும்
பறவையும் பூச்சியும்
விலங்கும் மனிதனுமாய்
பிறந்தபடியிருந்தன


காணும் தோறும்
படைப்புகள்
பெருகியபடியிருந்தன
எனக்கு வேண்டாதவையும்
உலவின இவ்வுலகில்

எனினும் நான்
அறிந்தே இருந்தேன்
எனை சுற்றி
வியாபித்திருந்த உலகு
சட்டெனெ அழிந்து போகும்

என் மரண கணத்தில்

- அப‌ராஜித‌ன்

2 comments:

  1. Ungalukku mattumalla ellorukum adhu azhindhu pogum.

    ReplyDelete