திடுதிப்பென்று
விபத்தில் மொத்தமாய்
செத்தவரில் ஒருவனாகவோ
விரோதியின்
கத்தியால் கண்ணிமைக்கும்
நேரத்தில் கழுத்தறுபட்டோ
ஊசியேற்றி மருந்திட்டு
பாகங்களை பிளந்தும்
பயனில்லாமல்
நோயின் சதியால்
சாகடிக்கப்பட்டோ
கடித்துக் குதறி
என் கறியின் ருசி பார்க்கும்
மிருகத்தின் கூரிய பற்களுக்கிடையே
மரணமேற்பட்டோ
ஆய்ந்து ஓய்ந்து
அலர்ந்து தளர்ந்து
கண்ணின்றி காதுகுன்றி
கட்டிலில் என் கழிவுகளுடனேயே
நானறியாது நானிறக்கவோ
விரும்பவில்லை அத்தகையதோர் மரணம்
அமர்ந்திருந்த்து
ஆழ்ந்துணர்ந்து
கழன்று பின் கரைவதாய்
வேண்டுமெனக்கு..
எல்லோரும் வேண்டும் மரணம் இப்படியாகத்தான்..
ReplyDeleteஅனால் வாழ்க்கைபாட்டில் வரையின்றி மாறிப் போய்விடுகிறது...
Engey irunthaan intha kavizngan... ithanai naalaaga..
ReplyDeleteKallura machi... this comments applies to all work you have done so far...
nalla irukunga
ReplyDelete