Wednesday, September 8, 2010

ரகசியம்

சிறகின் மடிப்புகளில்
பொதிந்து கிடக்கிறது
பறப்பதற்கான ரகசியம்

யாருமற்ற
பரந்த வானில்
சிறகு விரித்து
ரகசியங்களை படித்தபடி அலைகிறது
பறவை


ஜனக்கூட்டத்தின் மேல்
சிறகாய் உதிரக்கூடும்
ஒன்றிரெண்டு ரகசியங்கள்

சிறுபிள்ளை கூட்டமொன்று
சிறகுகளை கைபற்றி
புத்தக மடிப்புகளில் மீண்டும்
பொதித்து வைத்துக்கொள்கிறது
பறக்கும் ரகசியத்தை...

- அப‌ராஜித‌ன்

4 comments:

  1. தங்கள் மெரினா கடற்கரை பற்றிய கவிதையை ரசித்தேன்... நன்றாக இருக்கிறது..கடலை ஆணாகவும், கடற்கரையை பெண்ணாகவும் உருவதித்துள்ளீர்களா?

    ReplyDelete
  2. மிகவும் அருமை, நண்பரே...

    ReplyDelete
  3. Superr... Ellaam antha Murugan seyal...

    ReplyDelete